தேனி, ஜூலை.16-
தேனி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி போலீசார் ஜவகர்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முத்துராம்(36) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து புகையிலைபொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.