பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தில் மளிகை கடை செயல்பட்டு வருகிறது.
மளிகை கடைக்கு சீனிவாசன் என்பவர் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சப்ளை செய்த அரிசி மூட்டைகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக பணம் தராமல் கடைக்காரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் நேற்று மாலை கடன் பாக்கியை கேட்பதற்காக சீனிவாசன் தனது காரில் வந்துள்ளார்.
கடன் பாக்கி குறித்து கேட்டபோது மளிகை கடைக்காரர்கள் இவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் சீனிவாசன் வந்த காரின் கண்ணாடியை உடைத்து அவரை தாக்கிதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.