போளூர்:
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஜமுனாமரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் ரங்கநாதன் மாணவர்களுடைய வாசிப்பு திறனை அதிகரிக்க 150 நூலக புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மன்னர்சாமி, பள்ளி கல்வி குழு தலைவர் கீதா, ஊர் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.