செங்கம் பரமனந்தலில் பாப்பாத்தி அம்மாள் கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை 5-ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். அருகில் தளபதி பேரவை பாப்பாத்தி அம்மாள் கிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன், மாநில துணை பொதுச் செயலாளர் எம்.மணிகண்டன், வேதபுரி கண்ணப்பசுவாமிகள், எழுத்தாளர் சண்முகம், லாயர் சந்திரமோகன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
உள்ளூர் செய்திகள்

பொங்கல் தொகுப்பில் கரும்பு

தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர். அருள்காந்த் நன்றி தெரிவிப்பு பொதுமக்கள் வரவேற்பதாக அறிக்கையில் தகவல்

திருவண்ணாமலை:

தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் திருநாளாம் தை பொங்கலை தமிழகம் முழுவதும் விவசாயிகளின் உற்சாகமாக கொண்டாடும் வேலையில் பொங்கல் தொகுப்பில் கரும்பு விடுபட்டு இருந்தது இதை அரசியல் ஆக்க வேண்டும் என துடித்து ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்தது சென்னை உயர்நீதி மன்றத்திலும் கரும்பு வழங்க வேண்டும் என ஒரு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அனைத்தையும் முறியடித்து விவசாயிகளின் பொதுமக்களின் நலம் கருதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது அனைத்து தரப்பிலும் வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்று இருக்கிறது. முதல்-அமைச்சருக்கு தளபதி பேரவை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT