வந்தவாசி:
வந்தவாசியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத மஹா சனி பிரதோஷ பூஜை நடைபெற்றது. முன்னதாக நந்தி பெருமானுக்கு பசும்பால்,தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், ஆகிய விசேஷ திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு பஞ்சலோக ஆரத்தி காண்பிக்கப்பட்டு உற்சவராக பார்வதி சிவபெருமானை சுமந்தபடி நந்தி பெருமான் கோவிலை 3 முறை வலம் வந்தார்.
இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், மும்முனி, மாம்பட்டு, பிருதூர், மருதாடு, சத்யாநகர்,ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.