உள்ளூர் செய்திகள்

மழையால் வீடு இடிந்து சேதம்

வெளியில் சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது போலீசார் விசாரணை

மாலை மலர்

செய்யாறு:

செய்யாறு அடுத்த மூளகிரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. இவர் அப்பகுதியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சின்ன பொண்ணு வேலை சம்பந்தமாக வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்ததார்.

நேற்று பெய்த கன மழையால் ஓட்டு வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து அனாக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.