போளூர்,
போளூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா தலைமையில் நடைபெற்றது.
போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல துணை தாசில்தார் சுசிலா வரவற்றார். மாவட்ட விநியோக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்