உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு

தீயணைப்பு துறையினர் மீட்டனர்போலீசார் விசாரணை

செங்கம்:

செங்கம் அருகே மேலபூஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 50). இவருடைய மகள் சாதனா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் திடீரென மாயமானார்.

இதையடுத்து பாய்ச்சல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பே ரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தர்மலிங்கத் துக்கு சொந்தமான வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் மாணவி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து செங்கம் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவி உடலை மீட்டனர்.

போலீஸ் விசாரணையில் கால்நடைகளை பிடித்து சென்ற போது கால் தவறி கிணற்றில் சாதனா விழுந்து இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்