உள்ளூர் செய்திகள்

45 ஆயிரம் ஏக்கர் பயன் பெரும் வகையில் தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையை தூர்வார நிதி ஒதுக்கப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது சாத்தனூா் அணையின் நீர்மட்டம் 118.55 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிரவலப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 7220 மில்லியன் கன அடியாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூா் அணையில் இருந்து மாா்ச் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்க்காக இடது மற்றும் வலது புற கால்வாய்களின் வழியே தண்ணீா் திறந்து விடப்படும்.அதன் படி விவசாய பாசனத்திற்கு சாத்தனூா் அணையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் இடது மற்றும் அது பல கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்தார். அவர் கூறுகையில்:-

இந்த நிதியாண்டில் சாத்தனூர் அணையை தூர்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

விவசாய பாசனத்திற்க்காக தொடந்து 90 நாட்கள் இடது புற கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் மற்றும் வலது புற கால்வாயில் 220 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்தனர்.