கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

உடுமலை பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறதுமக்கள் கால்வாயில் குளித்து துணிகளை துவைத்து வந்தனர்.

மாலை மலர்

உடுமலை :

உடுமலை பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் உடுமலை கால்வாய் ஜீவா நகர், வெஞ்சமடை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் குளித்து துணிகளை துவைத்து வந்தனர். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் கால்வாயில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.