புதர்மண்டி கிடக்கும் ரெயில்வே குடியிருப்பை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

புதர்மண்டி கிடக்கும் உடுமலை ரெயில்வே குடியிருப்பு

ரெயில்வேயில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள்.இரவு நேரங்களில் பாம்புகள் வந்துவிடுகிறது.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை ெரயில்வே குடியிருப்பு பகுதிகளில் ரெயில்வேயில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கிறது. இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .இரவு நேரங்களில் பாம்புகள் வந்துவிடுகிறது.

இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றார்கள். எனவே இங்குள்ள புதர்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.