கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் இரு தரப்பினர் மோதல்

3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பல்லடம் போலீசார் விசாரணை.

மாலை மலர்

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கவி சங்கர்.இவரை தெற்கு பாளையத்தைச் சேர்ந்த தன்ராஜ், முத்துக்குட்டி, சந்தோஷ், ஆகிய மூவரும் சேர்ந்து வாட்ஸ் அப்பில் எங்களைப் பற்றி தவறாக ஏன் பேசினாய் என கூறி கவிசங்கரை தாக்கியுள்ளனர்.

இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் கவிசங்கர் புகார் அளித்தார் இதன் பேரில், தன்ராஜ், முத்துக்குட்டி, சந்தோஷ் ஆகிய 3பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கவி சங்கர் தன்னை தாக்கியதாக தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கவிசங்கர் மீதும், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.