அவினாசி :
அவினாசியை அடுத்து முத்துசெட்டிபாளையத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் சக்திகுமார்(வயது 30) .ஜவுளி கடையில வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (25). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனம் உடைந்த சக்திகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அவினாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.