கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்ட பதிவு முகாம்

மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது. முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.

மாலை மலர்

உடுமலை :

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தளி பேரூராட்சிக்குட்பட்ட குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது. ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை மற்றும் தளி பேரூராட்சி சார்பில் இந்த முகாம் நடந்தது. அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் .

இதில் மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், சண்முகசுந்தரம் எம்.பி., மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, பேரூராட்சி தலைவர் உதயகுமார், துணைத்தலைவர் செல்வன் பிரியா, நர்சிங் கல்லூரி முதல்வர் தவசிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி வேதியியல் துறை தலைவர் மலர்வழி ஒருங்கிணைத்தார். முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.