சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்தார். 
உள்ளூர் செய்திகள்

வீரபாண்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயகருக்கு 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்தார்.

வீரபாண்டி :

திருப்பூர் அருகே வீரபாண்டியில் விசாலாட்சியம்மை உடனமர் விஸ்வநாதர் மாகாளியம்மன் கோவிலில் உள்ள வில்வ விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி யை முன்னிட்டு 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்தார்.இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வில்வ விநாயகரை தரிசனம் செய்தனர்.