அவிநாசி :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில் சதங்கையணி பூஜை நடைபெற்றது.இதில், 16 மாணவிகள் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தனர்.
ஆசிரியை தேவிகா கூறுகையில், ஆண்டுதோறும் பரதநாட்டியத்தில் சான்றிதழ், பட்டய, மற்றும் பட்டப் மேற்படிப்புகளுக்கு பாடங்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பல்கலை தேர்வு நடத்தப்பட்டு பட்டம் வழங்கப்படுகிறது என்றார்.விழாவில் பரதநாட்டிய மாணவிகள் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.