பழுதடைந்துள்ள சாலை. 
உள்ளூர் செய்திகள்

உடுமலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

பழனி ரோடு ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.

உடுமலை :

உடுமலை பேருந்து நிலையம் அருகே பழனி சாலையையும் பைபாஸ் ரோட்டில் இணைக்கும் வகையில் இணைப்பு சாலை உள்ளது. பழனி ரோடு ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்த இணைப்பு சாலையை இப்பகுதியில் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அதோடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த இணைப்பு சாலை உள்ளது .

இந்நிலையில் இந்த இணைப்பு சாலை முழுவதும் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது .மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.