உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே குட்டையில் இறந்து கிடந்த பெண் சடலம் போலீசார் விசாரணை

50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

மாலை மலர்

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில், உள்ள குட்டையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தை சேர்ந்த மருதாசலம் மனைவி கந்தேஸ்வரி (55) என்பதும் கடந்த ஜூலை 30 ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது மகள் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.