உடுமலை:
உடுமலை ராமசாமி நகர் பகுதியில் வனத்தில் இருந்து தப்பி வந்த இரண்டு குரங்குகள் சேட்டை செய்து வருகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தி வருகிறது. இதனால் அனைவரும் பதட்டம் அடைந்து வருகின்றனர் .மேலும் அருகில் உள்ள மளிகை கடைமற்றும் பெட்டிக்கடைகளில் தின்பண்டங்களை எடுத்துச் சென்று விடுகிறது. எனவே வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.