கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் புஷ்பா சந்திப்பு நடை மேம்பாலம் தயார் - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய ரோடுகளில், நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகரப் பகுதியில் முக்கிய ரோடுகளாக உள்ள அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு ஆகிய ரோடுகளில் எப்போதும் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.

பெரும்பாலான ரோடுகளில் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல நடை மேம்பாலம் ஆகிய வசதியில்லாத நிலை இருந்தது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய ரோடுகளில், நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, பார்க் ரோடு, ெரயில் நிலையம் ,காங்கேயம் ரோடு ஆகிய பகுதிகளில் உயர் மட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.அதேபோல் அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பு பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாதக்கணக்கில் மேற்கொண்ட பாலம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் மீது வர்ணம் பூசும் பணி தற்போது நடக்கிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT