கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாள ராக வேலை செய்து வருகின்றார்.வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை மலர்

வெள்ளகோவில்:

முத்தூர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது30) .வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாள ராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு அஷ்மிதா (4) மற்றும் 1½ வயதான தர்ஷினிதா என்று 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை தர்ஷினிதா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது குளியல் அறை அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்து விட்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.