கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மடத்துக்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு ,ஆதார் அட்டை மற்றும் இரு போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

உடுமலை:

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள ஸ்மார்ட் கார்டு வழங்க உடுமலை தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். வரும் 17-ந்தேதி மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

இதில் பங்கேற்பவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு ,ஆதார் அட்டை மற்றும் இரு போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.