குவிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள். 
உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் குவிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்

திருப்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்துமிடத்தில் ஏராளமானவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  

இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பூரில் பணியாற்றி வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

இதனால் திருப்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்துமிடத்தில் ஏராளமானவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். 

இதனால் அங்கு மோட்டார் சைக்கிள்கள் குவிந்து கிடக்கின்றன.