கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

உடுமலையில் புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுமார் ஏற்கனவே உடுமலையில் வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்துள்ளார்.

மாலை மலர்

உடுமலை:

உடுமலை வனச்சரக அலுவலராக இதுவரை பணியில் இருந்து வந்த தனபால் காங்கயம் வனச்சரக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய உடுமலை வனச்சரக அலுவலராக சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுமார் ஏற்கனவே உடுமலையில் வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்துள்ளார். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி மற்றும் அலுவலர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வனச்சரக அலுவலருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.