அவினாசி:
அவினாசி ஒன்றியம் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை தொடக்க விழா நடந்தது. சங்கத் தலைவர் எ.வி.தனபால் முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். துணைத்தலைவர் வி.பழனி, பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார் தற்போதைய துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், சங்க இயக்குனர்கள், பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
பொதுமக்கள் சேவைக்காக உயர்ரக பட்டாசு ரகங்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தலைவர் எ.வி.தனபால் தெரிவித்துள்ளார்.