மடத்துக்குளம்:
கோவை சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் முத்தூர்,வெள்ளகோவில், சாமிநாதபுரம், மடத்துக்குளம் ஆகிய இடத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.மேலும் அங்கு ஏதாவது முறைகேடுகள் நடக்கிறதா, விவசாயிகளிடம் இருந்து புகார்கள் ஏதாவது உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.