திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இங்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணியாற்ற உள்ள முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் முகவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கினர்.