திருப்பூர்:
உடுமலையில் உள்ள டென்னிஸ் கிளப்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர் கபில் கைலாஸ் 17 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்தார். 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் மாணவர்கள் பிர்த்திவ் ஆர்யா மற்றும் கபில் கைலாஸ் முதலிடம் பெற்று மாநில அளவிலான ேபாட்டிக்கு தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மோகன் கே.கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.