கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறைக்கு சீல்வைப்பு

எந்திரங்கள் வைத்துள்ள அரங்கம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் 4 மண்டலங்களில் 776 ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்து இந்த எந்திரங்கள் எண்ணிக்கை மையமான சிக்கண்ணா கல்லூரி கொண்டு சென்று பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. 

22-ந்தேதி, ஓட்டு எண்ணிக்கை நடந்தது. எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் அவை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எந்திரங்கள் வைத்துள்ள அரங்கம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.