கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் பகுதி கோவில்களில் தொல்லியல் துறை அலுவலர் ஆய்வு

ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளகோவில்.அக்.12-

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் பகுதியில் கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை ஆலோசகர் அர்ச்சுனன், மிகவும் பழமையான கோவில்கள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அங்காளம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.