கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

அரசியல் கட்சி கொடி கம்பங்களில் கொடிகளை மாற்றி கட்டும் மர்ம நபர்கள் -நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் கோரிக்கை

உகாயனூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொடிக்க ம்பங்கள் உள்ளது.அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க.,அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொடிக்க ம்பங்கள் உள்ளது.இந்த கொடிக்கம்பங்க ளில் உள்ள கொடிகளை மர்மநபர்கள் இரவு நேரங்களில் மாற்றி கட்டும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்று நடைபெற்றது.இது குறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க கொடியையும், தி.மு.க.வின் கொடிக்கம்ப த்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியையும் கட்டி சென்றுள்ளனர்.

இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறா ர்கள்.எனவே போலீசார் இந்த செயலில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்காணித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்து ள்ளனர்.

SCROLL FOR NEXT