திருப்பூர், ஆக.2-
குமார்நகர் தபால் நிலையம், நிர்வாக காரணங்களுக்காக, காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டு, வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இன்று (2ம் தேதி) முதல் செயல்படும். புதிய முகவரியில் மக்கள் தபால் சேவையை பெறலாம்.
என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.