அவினாசி:
அவினாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த் துறை தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். ச.கண்ணப்பன் வாழ்த்துரையாற்றினார்.
திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் தமிழ்மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாணவர்கள் 135 குறள் ஒப்புவித்தல், நவீன நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம். சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
இதில் கல்லூரி பேராசியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.