உடுமலை :
உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை நகர பா.ஜ.க. சார்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம், நகர பொதுசெயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் , திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் , திருப்பூர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய கண்ணன், நகர சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.