உள்ளூர் செய்திகள்

கலைப்போட்டியில் அசத்திய பெருமாநல்லூர் பள்ளி மாணவிகள்

6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

பெருமாநல்லூர் : 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற இருக்கும் கலைப் போட்டியில் பங்கேற்க பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர் இதில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.

இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.இந்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT