இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத்.  
உள்ளூர் செய்திகள்

இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்

வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

மாலை மலர்

திருப்பூர்:

இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்துக்கள் அனைவரும் சாதிகளை மறந்து ஒற்றுமையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.

இந்த ஆண்டு பா.ஜ.க. கட்சி விநாயகரை வைத்து வழிபடுவதற்கு திட்டமிட்டுள்ளதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. தமிழக அரசு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.