சிவகாமியம்மன் சமேத ஸ்ரீ நடராஜபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  
உள்ளூர் செய்திகள்

ஆனி திருமஞ்சன பூஜை

ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் பூஜையில் 16வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள சிவகாமியம்மன் சமேத ஸ்ரீ நடராஜபெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் பூஜை நடைபெற்றது. இதில் 16வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.