சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் சக்தி விநாயகர் கோவிலில் 9-ம் ஆண்டு விழா

விநாயகருக்கு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை மலர்

பல்லடம் :

பல்லடம் வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் 9-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சக்தி விநாயகருக்கு பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.