ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோலூர் ஊராட்சியில் தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை மூடப்பட்டது.
அப்போது பாதி பேருக்கு சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மென்ட் வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பலமுறை நிலுவைத் தொகை வழங்க கோரியும், இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பூட்டி கிடந்த தோல் தொழிற்சாலையை கதவுகள் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மெண்ட் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.