உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விரக்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த செங்கிலிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) கூலி தொழிலாளி.

இவரது மனைவி ஜெயந்தி. தம்பதியினருக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

இதனால் மனமுடைந்த ரமேஷ் கடந்த 22-ந் தேதி விஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்க சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.