வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி ஒன்றியம் எக்லாஸ்புரம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பலவகையான மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர். இ.எஸ்.பாரதிசேட்டு, துணைத்தலைவர், தினகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேபோல், அம்பலூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 பல்வேறு வகையான பலன் தரும் மரக்கன்றுகள் நட்டனர்.