நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை கைதை கண்டித்து நடந்தது ஏராளமனோர் பங்கேற்றனர்

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

சென்னையில் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்தும் நாட்டறம்பள்ளி பாரதிய ஜனதா சார்பில் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கண்மணி, கவிதா சுரேஷ், ஆகியோர் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு கண்டித்தும், அண்ணாமலை உடனடியாக விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.