கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

திசையன்விளையில் முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்

திசையன்விளையில் முககவசம் அணியாத 30 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

திசையன்விளை:

திசையன்விளை சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர்.

மேலும் திசையன்விளை அற்புதவினாயகர்கோவில் சந்திப்பில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது முக கவசம் அணியாத 30 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.