நெல்லை:
வள்ளியூர் அருகே உள்ள சாலைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
தினசரி வீட்டிற்கு மது குடித்து வந்ததால், உறவினர்கள் கண்டித்தனர். இதில் மனமுடைந்த சுரேஷ் குமார் கடந்த 25&ந்தேதி விஷம் குடித்து உயிருக்கு போராடினார்.
அவரை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.