விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

வல்லநாட்டில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பள்ளி தாளாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியைகள் ரத்தினம், செல்வி, ராமசெல்வம், சிவகாமசுந்தரி, லட்சுமி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவ - மாணவிகள் வல்லநாடு பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பதாகைகளையும் அட்டைகளையும் ஏந்தி வலம் வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.