தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சிக்கு உட்பட்ட குட்டிதோட்டம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மீட்டர் மற்றும் மெயின் சுவிச் பாதுகாப்பு இல்லாமலும் மின்சார மீட்டர் பெட்டி திறந்த நிலையிலும், மூடி இல்லாமலும் உள்ளது.
அருகில் குடியிருப்பு பகுதியாகவும், பொதுமக்கள் நடமாடும் பகுதியாகவும் இருப்பதால் மின்கம்பத்தில் அருகில் செல்லவே அச்சமாகவும் பாதுகாப்பு இல்லாமலும் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் மீட்டர் பெட்டியை மூடிபோட்டு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.