முகாமில் கலெக்டர் செந்தில்ராஜ் மனுகளை பெற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

புன்னக்காயலில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் புன்னக்காயலில் நடந்தது.

மாலை மலர்

ஆத்தூர்:

புன்னக்காயலில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

முகாமில்  பொதுமக்களிடமிருந்து, குடிநீர் பிரச்சனை,சாலை பிரச்சனை மற்றும் பட்டா பிரச்சனை, எரியாத தெருவிளக்குகள் குறித்து  மனுக்கள் பெறப்பட்டன.

 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் உறுதியளித்தார்.

முகாமில் புன்னக்காயல் பஞ்சாயத்து  தலைவி சோபியா,  திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், புன்னக்காயல் ஊர் தலைவர் அமலிசன்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மைக்கேல், ஊராட்சி செயலர் கருப்பசாமி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.