கயத்தாறு:
கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஊருக்கு தெற்கு பகுதியில் ஆதிநாராயணன் என்பவரது மகன் மாரியப்பன் மோட்டார் பம்ப்செட் கிணறு உள்ளது.
இந்த கிணற்றில் அவரது உறவினர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, சங்கர், குருசாமி ஆகியோர் வாழை பயிரிட்டிருந்தனர்.
இந்த வாழை தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த இந்த வாழை வெட்டப்பட்டதால், வாழை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி திலீப், ஆறுமுகம், காசிலிங்கம், மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடததிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு யெ்து வாழைகளை வெட்டிய மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.