முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினார்.
தொடர்ந்து அவர் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கினார்.
பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.