திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி தேர்தல் ஒட்டி பறக்கும் படை அணி-1 வெ.சோமசுந்தரம், பறக்கும் படை தாசில்தார், மாவட்ட வழங்கல் அலுவலகம், திருவாரூர். எஸ்.புஷ்பநாதன், எஸ்.எஸ்.ஐ தலைமையிலான அணியினர் திருவாரூர் சாலையில் திருத்துறைப்பூண்டி தனியார் திருமண மண்டபம்
எதிரே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பிரசாத் (29) என்பவர் உரிய
ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.73,460-யை கைப்பற்றி நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர்.